Monday, February 23, 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள்..

தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் 2 ஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

திரைத்துறையில் உலகின் மிக உயரியதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று காலை தொடங்கியது.

A.R. Rahman
AP
இதில், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டது.

இப்படத்திற்கு இசையமைத்த தமிழரான ஏ.ஆர்.ரகுமான், சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான இசையமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த இரண்டு பிரிவுகளிலும் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.

இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டதும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் மேடையேறிய ஏ.ஆர்.ரகுமான், விருதை பெற்ற பிறகு 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசினார்.

ரவிந்த்..

No comments:

Post a Comment