Friday, August 27, 2021

CAPITONYM

Is there a difference between  August and august? One of my friends asked.
 
I did not understand the difference between these two English words when first read.

Only later did it become clear that he was asking about Capitonym.

That is, one word he mentions (August) starts with a Capital Letter, and the other starts with august without a Capital Letter.

Such words are called Capitonym in English.

That is, if the first letter is changed to Capital, the meaning of the word changes.

Sometimes even the pronunciation changes.  Just take the words the friend pointed out.

August is the name of a month.  Derived from the name of the Roman emperor Augustus.

Rather, the word august means respectable and attractive. That is equivalent to words like Respected, distinguished, renowned, prestigious. I was in an august company or it was an august performance.
 
Another month also falls into this category.  You know that the word March refers to the third month of the year.

Rather the march is meant to take place at regular intervals as it does in the army.

What do you say if the second of the above words (august, march) occurs at the beginning of the sentence?  (The opening letter of the sentence must be written in capital letters only!)

It is important to take care not to get such a place.  That’s why I even included the word ‘rather’.

Capitonym is sometimes used to distinguish a particular object from other similar objects.

There are many suns in the universe.  One of them is called the Sun around which planets like the earth are orbiting.  

Church is a group of people gathered for a specific purpose.  If the first letter is a small church it means only one building.

Liberal means those who belong to the Liberal Party. Rather liberal means that it is liberal.

Cancer is a specific astronomical group or zodiac sign.  We use the word cancer to refer to disease cancer. 

It is well known that the Titanic was a huge shipwreck.  Minimizing the first letter means titanic only means gigantic.

See how this sentence looks like.

A turkey may march in Turkey in May or March!

Ref: WhatsApp 

Aravind T.. 

Wednesday, July 28, 2021

மனிதனின் ஆயுட்காலம் குறுக காரணங்கள்

மனிதனின் ஆயுட்காலம் குறுக காரணங்கள் 

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
2. இரவில் கண் விழித்திருத்தல்
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தையேனும்  உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.

அரவிந்த் த. 

Sunday, June 27, 2021

கலியுக கணிப்புகள்


கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

    5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்

     நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். 
    இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். 

    பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.

     5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
      மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.
     
    ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!...

    1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
     [பாகவத புராணம் 12.2.1]

    2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
     மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
     மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
     [பாகவத புராணம் 12.2.2]

    3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
     தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். 
     [பாகவத புராணம் 12.2.36)

    4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
     கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
     வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
     [பாகவத புராணம் 12.2.4]

    5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
     குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
     [பாகவத புராணம் 12.2.5]

    6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
     முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். 
    வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். 
    பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
     [பாகவத புராணம் 12.2.6]

    7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். 
    தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். 
    [பாகவத புராணம் 12.2.7]

    8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
    இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
    (அரசின் அலட்சியப் போக்கினால்)     கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.9]

    9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
     இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
     [பாகவத புராணம் 12.2.10]

    10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
    [பாகவத புராணம் 12.2.11]

    11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். 
   [பாகவத புராணம் 12.3.42]

    12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
     நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
     [பாகவத புராணம் 12.3.41]

    13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
     தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
     தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். 
    [பாகவத புராணம் 12.3.38]

    14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
     இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
     நன்றிகடன் மறக்கப்படும். 
    [பாகவத புராணம் 12.3.36]

  15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
       அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். 
     போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
   [பாகவத புராணம் 12.3.32]
************************************

   கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. 
    ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. 

    கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.

                மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.

     மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.

     கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

   கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.

     இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.

      அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்!.

      மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும்.

      ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.
          
WhatsApp பில் வந்த பதிவு நன்றி......


Saturday, May 29, 2021

எது கெடும்


அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?  நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... 

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும்  கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு..

 இன்று உலகில் சிந்தித்து செயல் படவேண்டிய விஷயங்களை தெளிவாக சொல்லியிருப்பது தமிழுக்கும் தமிழனுக்கும் இந்தியனுக்குமே பெருமை.

Ref : Facebook 

Thursday, April 29, 2021

பாகப் பிரிவினை


பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

*சரிசமமாக பிரித்து* *கொள்கிறோம் என்பது பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு* *குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு சென்று அந்த பாகப்பிரிவினை* *செல்லாது என்றும் நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம்.

எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூட, ஒருவருக்கு குறைய இருக்கலாம். ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும்.
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

பிரிக்க முடியாததை பிரித்தால், மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால்* அதனை, (NOT DIVISIBLE BY METERS AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது.
பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறலாம். 

(இப்பொழுது பாகப்பிரிவினை செய்து, தனித்தனி, பத்திரம் தேவையில்லை.).... என்று உதாரணத்திற்கு வைத்து கொள்வோம்...

பிரிக்க முடியாத சொத்தை, யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இல்லை, பகை முரண்களில் சகோதர, சகோதரிகள் சிக்கிக் கொண்டு அனைவரும் சொத்து எனக்கு வேண்டும் என்று சொன்னால், அந்த சொத்தை பொது ஏலத்திற்கு தான் கொண்டு வர வேண்டும். அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும்.

பாகம் பிரிக்கும் சொத்துக்களில் இருக்கும் கடன்களை, ஒருவர் மட்டும் மீட்டு இருந்தால், அதற்கான பணத்தை பெற அவருக்கு உரிமை உண்டு.
மேற்படி சொத்துக்களில் மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தோடு அதில் ஒரு மாடியோ, சுற்று சுவரோ கட்டி இருந்தால் அதற்கான பணத்தை பெறலாம்.

மற்ற பாகஸ்தரர்கள் முதலில் ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பங்கு கேட்பதும் முடியாத காரியம்.
பாகப்பிரிவினையில் எப்போது மூத்தவர்கள் தான் விட்டு கொடுக்க வேண்டும். இளையவர்களும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நம் முன்னோர் மரபு “வலுத்தவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே”! 

அதனால் வயதில் பெரியவர்களையே விட்டு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்.
சொத்தை பங்கிடும் போது கிழமேலாகவோ அல்லது தென் வடக்காகவோ பங்கிடலாம். அவ்வாறு பங்கிடும் போது கிழமேலிருந்தால் கிழக்கு ஓரத்தின் முதல் பங்கு கடைசி குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்தவர் அதற்கு அடுத்த பங்கு, இப்படியாக மேற்கு கடைசி பங்கு மூத்தவர் எடுத்து கொள்ளலாம். இதேபோல் வடக்கிலிருந்து பிரிக்கும் போது வடக்கின் முதல் பாகம் கடைசி தம்பிக்கும், தெற்கின் இறுதி பங்கு மூத்தவர்க்கும் கிடைக்கும்.
இளையவன் அதிக சலுகை பெற்றால் எதிர்காலத்தில் மூத்தவர்கள் வயதாகும் போது இளையவன் தோள் கொடுப்பான் என்று இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

பாகப்பிரிவினையில் பணத்தை வீணாக்காமல் இருக்க 11 வழி முறைகள்.....

சகோதர, சகோதரிகளிடையே இணக்கமும், அன்பும் இல்லாத இடத்தில் பாகபிரிவினையில், அதிக அளவு செலவுகள் ஆகும். மூத்தவர் இறுக்கி பிடித்தால் இளையவரும் இறுக்கிப் பிடிப்பார் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.

பங்குகளில் சச்சரவு இல்லாமல் பிரிக்க வேண்டும். எப்போதும் குடும்பத்தினருக்குள்ளேயே பேசி முடிக்க வேண்டும். யாருக்கு என்ன பங்கு என்று, வெளிநபரையோ, நாட்டாமையையோ, பெரிய மனுஷங்களையோ அறவே தவிர்க்க வேண்டும்.

பங்கு பிரிப்பதில் முரண்பாடுகள் அதிகம் இருந்தாலும் நிச்சயம் நீதிமன்றம் நாடக்கூடாது. பேசித் தீர்க்க வேண்டும். மிக மிக கடைசி வாய்ப்பாக கோர்ட்டை தீர்வாக நினைக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில், பெரிய மனுஷன்களை வைத்து பேச்சுவார்த்தையை நடத்தலாம்.

சகோதரர் சகோதரிகளிடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் பாகம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பக் கூடாது. முடிந்தவரை நேரில் சந்தித்து பேச வேண்டும். முடியவில்லை என்றால் நீங்களே கைப்பட பாகம் கேட்டு சகோதரர் சகோதரிகளுக்கு கடிதம் எழுதலாம்.

பாகப் பிரிவினை வேலையை செய்ய செலவு யார் செய்வது என தள்ளி போட்டால், நாள் தள்ள தள்ள செலவு கூடுமே தவிர நிச்சயம் செலவு குறையாது.

“பூனைக்கு யாராவாது மணிகட்ட வேண்டும்” என்ற எண்ணத்தில் யாராவது ஒரு சகோதரர் அல்லது சகோதரி முன் முயற்சி எடுக்க வேண்டும். அனைத்து சகோதரி சகோதர்களும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வேலையில் இருந்தாலும், இவர்களை ஒருங்கிணைக்க ஒருவர் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

பெரும்பாலும், குடும்ப நல்லது கெட்டதுகளில் கூடும்போது இந்த பாக பிரிவினைகளை முடித்துவிட வேண்டும். பாகப் பிரிவினைக்கு என்று ஒரு தனி சந்திப்பு என்பது வீணான செலவுகள்.
நிலவரி திட்ட சர்வே நடக்கும் போதோ , ஜமாபந்தியின் போதோ எளிதாக வருவாய் துறையின் ஆவணங்களில், அனைத்து பாகஸ்தாரர்களின் பெயரை சேர்த்து விடலாம். செலவு மிக குறைவு.

பெரும்பாலும் விவசாய நிலங்களை கூர்சீட்டு போட்டு கொள்ளலாம். தனிப்பட்டாவை அதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.
நகர சொத்துகளுக்கு மற்றும் அதிக மதிப்பு உள்ள சொத்துக்களுக்கு மட்டும், பாகவிரினை பத்திரம் போட்டு கொள்ளலாம்.

பாகப் பிரிவினையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

நீங்கள் வாங்கும் சொத்து பாக பிரிவினை மூலம் வந்து இருக்கிறது என்றால், பாகப்பிரிவினை பத்திரத்தையோ (அ) கூர் சீட்டையோ நன்கு படித்து பார்த்து சட்டப்படி யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று தெரிந்து கொண்டு, அந்த பங்கின் படி தான் நீங்கள் வாங்கும் சொத்து இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.

இதில் கொஞ்சம் கவனம் குறைந்து விட்டாலும் எதிர்காலத்தில் மற்றொரு பாகஸ்தர்களோ, அவர்களின் வாரிசுகளோ வழக்கு போடலாம். எனவே கீழ்க்கண்ட பட்டியலை எப்போதும் மனதில் வையுங்கள்.

இஸ்லாம் சட்டப்படி கணவன் இறந்தால் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

கணவன் இறந்தால்
கணவன் சொத்தில் மனைவிக்கு 1/8

பிள்ளைகளுக்கு
மீதி இருக்கும் பங்கு

பிள்ளைகளில் ஆண்களுக்கு
மீதியில் 2 பங்கு வீதம்

பிள்ளைகளில் பெண்களுக்கு
மீதியில் 1 பங்கு வீதம்

ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்
மீதியில் 1/2 பங்கு

ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
மீதியில் 2/3 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால்
மனைவிக்கு 1/4 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தாயாருக்கு
மீதியில் 1/3 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு
1/6 பங்கு

இஸ்லாம் சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

மனைவி இறந்தால், மனைவி சொத்தில் கணவனுக்கு
1/4 பங்கு

பிள்ளைகளுக்கு
மீதி உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்றால் மகன்களுக்கு
மீதி உள்ளதில் 2 பங்கு வீதம்

மகள்களுக்கு
மீதி உள்ளதில் 1 பங்கு வீதம்

ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்

மீதி உள்ளதில் 1/2 பங்கு

ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
தலா 2/3 பங்கு

மேற்படி மனைவி, வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டால்
½ பாகம்,( சரி பாதி கணவனுக்கு)

மனைவியின் தாயாருக்கு
மீதி சொத்தில் 1/3 பங்கு வீதம்

மனைவியின் தகப்பனார்ருக்கு (தாத்தா & பாட்டிக்கு)
1/6 பங்கு

கிறிஸ்தவ சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?

கணவன் இறந்தால் மனைவிக்கு
கணவரின் சொத்தில் 1/3 பங்கு

மகன்கள் மற்றும் மகள்களுக்கு
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கணவருக்கு வாரிசு இல்லையென்றால் 1/3 பங்கை மனைவி எடுத்து கொண்டு கணவனின் தந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தந்தையும் இல்லை என்றால் அவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் சரி சமமாக எடுத்து கொள்ளலாம்.

கிறிஸ்தவ சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?

மனைவி இறந்தால் அவரின் கணவருக்கு
மனைவியின் சொத்து கணவருக்கு சொத்தில் 1/3 பங்கு

மகன்கள் மற்றும் மகள்கள்
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறந்தவர் மனைவி வாரிசு இல்லை என்றால்....

கணவன் சொத்தில் 1/3 எடுத்து கொண்டு மீதி சொத்தை தந்தைக்கு கொடுத்து விட வேண்டும்.

மேற்படி தந்தை இல்லை என்றால் மேற்படி சொத்து தாயாருக்கோ அல்லது சகோதர சகோதரிக்கோ சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.

இந்து சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

கணவன் இறந்தால் அவருடைய முதல் வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.

கணவரின் முதல் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளில் தந்தை மட்டும் முழு சொத்தையும் அடையலாம்.

கணவரின் இரண்டாம் வாரிசுகளில் தந்தை இல்லையென்றால் மீதி உள்ள இரண்டாம் வாரிசுகள் அனைவரும் அனைவருக்கும் சம பங்கு அடையலாம்.

இரண்டாம் வாரிசுகளில் சிலர் உயிருடன் இருந்து சிலர் உயிருடன் இல்லையென்றால் உயிருடன் இல்லாதவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் எந்த வித பங்கும் கிடையாது.

இரண்டாம் வாரிசுகளில் தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் யாருமே உயிருடன் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளின் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும் .

இந்து சட்டப்படி கணவனின் முதல் வாரிசுகள் யார் யார் ?

1. தாய்
2. மனைவி
3. மகன்
4. மகள்
5. முன்னரே இறந்த மகனின் குழந்தை
6. முன்னரே இறந்த மகளின் குழந்தை
7. இறந்த மகனின் விதவை மனைவி

இந்து சட்டப்படி கணவனின் இரண்டாம் வாரிசுகள் யார் யார் ?

1. தந்தை
2. தந்தை இல்லையென்றால் உயிருடன் இருக்கும் சகோதர சகோதரிகள்
3. சகோதர சகோதரிகள் யாரும் உயிருடன் இல்லையென்றால் அவர்களின் வாரிசுகள்

இந்து சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

மனைவி இறந்தால் அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.

மனைவியின் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகளுக்கு சம பங்கு.

கணவனின் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தகப்பனார் வாரிசுகள் சம பங்கு அடைவார்கள்.

மனைவியின் தகப்பனார் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தாயார் வாரிசுகள் அடைவார்கள் சம பங்கு அடைவார்கள் .

மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து மனைவியின் சுய சம்பாத்தியமாக இருந்தால் கணவனுக்கும் கணவனின் வாரிசுகளுக்கும் முழுமையாக சென்றடையும் .

மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து சீதனமாக தந்தையார் வழியில் வந்திருந்தால், மேற்படி சொத்து கணவனுக்கும் கணவனின் வாரிசுக்கும் சேராது . திரும்ப தந்தையார் வாரிசுகளுக்கு சென்று விடும்.

இந்து சட்டப்படி மனைவிக்கு முதல் வாரிசுகள் யார் யார் ?

1. பெண்ணின் மகன்கள்
2. பெண்ணின் மகள்கள்
3. முன்னரே இறந்த மகனின் குழந்தைகள்
4. முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்
5. கணவர்

…………………………………………………………………………………………………..

தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்....

ஒரே குடும்பத்தினர் பாகபிரிவினை பத்திரம்:

“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது 

‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும் தான்), 

தந்தை, 
தாய், 
மகன், 
வளர்ப்பு மகன், 
மகள், 
வளர்ப்பு மகள், 
பேரன்,
 பேத்தி, 
சகோதரன், 
சகோதரி” 

ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். 

(இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள்) என்று பத்திரபதிவு அலுவலகம் சொல்கிறது .

பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது...

1. பூர்வீகச் சொத்தாக இருந்தாலும்
,
2. நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,

3. பெற்றோர்கள் இறந்த பின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்

மேற்படி பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும்.

ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சொத்தின் மதிப்பு ரூ..25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ..25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.

குடும்ப உறுப்பினர் அல்லாத பாகபிரிவினை பத்திரம்....

குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டு விட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.)

பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

3.கூர்சீட்டு (வாய்மொழி பாகப்பிரிவினை பத்திரம்)

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும் போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம்.

அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு பங்கு பிரித்த படியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது.

எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.

இருந்த போதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம்.

இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம்.

அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம்.

அதற்குப் பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும்.

ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

நன்றி.

Ref: Facebook 

Monday, March 29, 2021

ஆரோக்கியம் காப்போம்



1) காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2) 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3) இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப் பை பயப்படுகிறது.

4) ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

5) நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

6) சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

7) அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

8) அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

9) சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

10) இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

11) எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.

உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள்.

இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை.

அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது.

எனவே நம் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

நன்றி... 
ஆரோக்கியம் காப்போம்...

Ref: WhatsApp 

Sunday, February 28, 2021

School Days

ᴅᴏ ʏᴏᴜ sᴛɪʟʟ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴛʜᴏsᴇ ᴀᴡᴋᴡᴀʀᴅ ᴅᴀʏs ɪɴ sᴄʜᴏᴏʟs ᴅᴜʀɪɴɢ ᴇxᴀᴍs?


ᴡʜᴇɴ ᴀ ʙʀɪɢʜᴛ sᴛᴜᴅᴇɴᴛ ᴛᴇʟʟs ᴛʜᴇ ɪɴᴠɪɢɪʟᴀᴛᴏʀ ᴛʜᴀᴛ ǫᴜᴇsᴛɪᴏɴ 4 ʜᴀs ᴀ ᴘʀᴏʙʟᴇᴍ, ʙᴜᴛ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ᴀʟʀᴇᴀᴅʏ ᴀɴsᴡᴇʀᴇᴅ ɪᴛ...😳😜

ᴡʜᴇɴ ᴀ ғᴇʟʟᴏᴡ sᴛᴜᴅᴇɴᴛ ᴀsᴋs ғᴏʀ ᴀ ɢʀᴀᴘʜ ᴘᴀᴘᴇʀ, ʙᴜᴛ ʏᴏᴜ ᴀʀᴇ ғɪɴɪsʜᴇᴅ ᴀɴᴅ ᴅɪᴅ ɴᴏᴛ sᴇᴇ ᴀɴʏᴡʜᴇʀᴇ ᴡʜᴇʀᴇ ɪᴛ ᴡᴀs ʀᴇǫᴜɪʀᴇᴅ...😧 😁😁

ᴡʜᴇɴ ᴛʜᴇ ɪɴᴠɪɢɪʟᴀᴛᴏʀ sᴀʏs ᴊᴜᴍᴘ ǫᴜᴇsᴛɪᴏɴ 6 ᴡᴇ ᴡɪʟʟ ʀᴇᴄᴛɪғʏ ɪᴛ ʟᴀᴛᴇʀ, ʙᴜᴛ ɪᴛ ᴡᴀs ᴛʜᴇ ǫᴜᴇsᴛɪᴏɴ ʏᴏᴜ ᴇɴᴊᴏʏᴇᴅ ᴍᴏsᴛ ᴡʜᴇɴ ᴀɴsᴡᴇʀɪɴɢ...😟 😱😲

ᴡʜᴇɴ ʏᴏᴜ sᴇᴇ ᴘᴇᴏᴘʟᴇ ʙᴜsʏ ᴜsɪɴɢ ʀᴜʟᴇʀs ᴀɴᴅ ʏᴏᴜ ᴀʀᴇ ᴡᴏɴᴅᴇʀɪɴɢ ᴡʜᴀᴛ ɪs ɢᴏɪɴɢ ᴏɴ...😣😫😫

ᴡʜᴇɴ ʏᴏᴜ ʜᴇᴀʀ ʏᴏᴜʀ ғʀɪᴇɴᴅs ᴀʀɢᴜɪɴɢ ᴀғᴛᴇʀ ᴛʜᴇ ᴇxᴀᴍ ᴡʜᴇᴛʜᴇʀ ᴛʜᴇ ᴀɴsᴡᴇʀ ᴛᴏ ǫᴜᴇsᴛɪᴏɴ 5 ᴡᴀs 35.5% ᴏʀ 36.5% ᴀɴᴅ ʏᴏᴜʀ ᴀɴsᴡᴇʀ ᴡᴀs 1,800... 😩😏

ᴛʜᴇ ᴄʀᴇᴀᴍ. ᴡʜᴇɴ ᴛʜᴇ ᴏᴛʜᴇʀ sᴛᴜᴅᴇɴᴛs ᴀsᴋᴇᴅ ғᴏʀ 4-5 ᴀᴅᴅɪᴛɪᴏɴᴀʟ ᴀɴsᴡᴇʀ sʜᴇᴇᴛs ᴀɴᴅ ʏᴏᴜ ʜᴀᴅ ᴛᴡᴏ ᴘᴀɢᴇs ᴇᴍᴘᴛʏ ɪɴ ᴛʜᴇ ᴍᴀɪɴ ᴀɴsᴡᴇʀ sʜᴇᴇᴛ...😨😰😱

sᴇᴇ ᴡʜᴇʀᴇ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ʀᴇᴀᴄʜᴇᴅ ɪɴ ʟɪғᴇ ɪɴsᴘɪᴛᴇ ᴏғ ᴛʜᴏsᴇ ᴍᴏᴍᴇɴᴛs...ᴛʜɪɴɢs ᴀʀᴇ ɴᴏᴛ ᴘᴇʀᴍᴀɴᴇɴᴛ...ᴇɴᴊᴏʏ ʟɪғᴇ! 😃😃

ᴏɴʟʏ ғᴏʀ ᴛʜᴏsᴇ ᴡʜᴏ ᴇɴᴊᴏʏᴇᴅ ᴛʜᴇɪʀ sᴄʜᴏᴏʟ ʟɪғᴇ...😂😂😂

*ᴛᴏᴘ 10 ᴅɪᴀʟᴏɢᴜᴇ ᴏғ ᴛᴇᴀᴄʜᴇʀ:*
👉 ɪғ ʏᴏᴜ ᴀʀᴇ ɴᴏᴛ ɪɴᴛᴇʀᴇsᴛᴇᴅ ᴛʜᴇɴ ʏᴏᴜ ᴍᴀʏ  ʟᴇᴀᴠᴇ ᴛʜᴇ ᴄʟᴀss.
👉 ᴛʜɪs ᴄʟᴀss ɪs ᴡᴏʀsᴇ ᴛʜᴀɴ ᴀ ғɪsʜ ᴍᴀʀᴋᴇᴛ.
👉 ᴀʀᴇ ʏᴏᴜ ʜᴇʀᴇ ᴛᴏ ᴡᴀsᴛᴇ ʏᴏᴜʀ ᴘᴀʀᴇɴᴛs ᴍᴏɴᴇʏ? 
👉 ᴛᴇʟʟ ᴍᴇ ᴡʜᴇɴ ʏᴏᴜ ᴀʟʟ ʜᴀᴠᴇ ғɪɴɪsʜᴇᴅ ᴛᴀʟᴋɪɴɢ.
👉 ᴡʜʏ ᴀʀᴇ ᴜ ʟᴀᴜɢʜɪɴɢ? ᴄᴏᴍᴇ ʜᴇʀᴇ ɴ ᴛᴇʟʟ ᴜs ᴡᴇ'ʟʟ ᴀʟsᴏ ʟᴀᴜɢʜ. 
👉 ᴅᴏ ʏᴏᴜ ᴛʜɪɴᴋ ᴛᴇᴀᴄʜᴇʀs ᴀʀᴇ ғᴏᴏʟs ᴛᴏ ᴛᴇᴀᴄʜ ʏᴏᴜ?
👉 ᴅᴏɴ'ᴛ ᴛʀʏ ᴛᴏ ᴀᴄᴛ ᴏᴠᴇʀsᴍᴀʀᴛ ᴡɪᴛʜ ᴍᴇ.
👉 ᴡʜʏ ᴅᴏ ᴜ ᴄᴏᴍᴇ ᴛᴏ sᴄʜᴏᴏʟ ᴡʜᴇɴ ʏᴏᴜ ᴅᴏɴ'ᴛ ᴡᴀɴᴛ ᴛᴏ sᴛᴜᴅʏ.
👉 ᴛʜᴇ ᴘʀᴇᴠɪᴏᴜs ʙᴀᴛᴄʜ ᴡᴀs 100 ᴛɪᴍᴇs ʙᴇᴛᴛᴇʀ ᴛʜᴀɴ ʏᴏᴜʀs.
👉 ɪғ ʏᴏᴜ ᴡᴀɴᴛ ᴛᴏ ᴛᴀʟᴋ ᴛʜᴇɴ ᴜ ᴍᴀʏ ɢᴇᴛ ᴏᴜᴛ ғʀᴏᴍ ᴛʜᴇ ᴄʟᴀss.

ᴀɴᴅ ᴛʜᴇ ʙᴇsᴛ ᴏɴᴇ
👉 ʏᴏᴜ, ʏᴇs ʏᴏᴜ...  ɪ ᴀᴍ ᴛᴀʟᴋɪɴɢ ᴛᴏ ʏᴏᴜ ᴏɴʟʏ, ᴅᴏɴ'ᴛ ʟᴏᴏᴋ ʙᴀᴄᴋ... 😄😄

ɪ'ᴍ sᴜʀᴇ ᴛʜᴀᴛ ᴛʜᴇ ʟᴀsᴛ ʟɪɴᴇ ᴍᴀᴅᴇ ᴀʟʟ ᴏғ ʏᴏᴜ ʀᴇᴍᴇᴍʙᴇʀ ᴀɴᴅ sᴍɪʟᴇ .
ᴛʜɪs ᴡᴀs ᴏᴜʀ sᴄʜᴏᴏʟ ᴅᴀʏs. 
ᴛʜᴇ ʙᴇsᴛ ᴘᴀʀᴛ ᴡᴀs ᴛʜᴀᴛ ᴡᴇ ᴜsᴇᴅ ᴛᴏ ʜᴀᴠᴇ ᴛʜᴇ ᴍᴏsᴛ ɪɴɴᴏᴄᴇɴᴛ ғᴀᴄᴇ ᴛᴏ sʜᴏᴡ ᴀᴛ ᴛʜᴀᴛ ᴘᴏɪɴᴛ...😂😂 

Missing those days badly... 
Ref : WhatsApp share

Aravind T. 

Thursday, January 28, 2021

மாற்றம் அன்றும் இன்றும்

அன்று 
வீடு நிறைய குழந்தைகள் 
இன்று 
வீட்டுக்கொரு குழந்தை 

அன்று 
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
இன்று 
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

அன்று 
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி 
இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி 

அன்று
படித்தால் வேலை
இன்று 
படிப்பதே வேலை

அன்று 
வீடு நிறைய உறவுகள்
இன்று 
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை

அன்று  
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு

அன்று
முதுமையிலும் துள்ளல்
இன்று
இளமையிலேயே அல்லல்

அன்று 
உதவிக்கு தொழில் நுட்பம்
இன்று
தொழில் நுட்பம் தான் எல்லாம்

அன்று 
யோக வாழ்க்கை
இன்று
எந்திர வாழ்க்கை 

அன்று 
படங்களில் ஒரு குத்து பாட்டு
இன்று
குத்து பாட்டில் தான் படமே

அன்று  
ஓடினோம் வயிற்றை நிறைக்க 
இன்று 
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

அன்று
பெரியோர்கள் பாதையில்
இன்று 
இளைஞர்கள் போதையில் 

அன்று  
ஒரே புரட்சி 
இன்று 
ஒரே வறட்சி

அன்று 
சென்றார்கள் வளர்ச்சியில்
இன்று
செல்கிறது சினிமா கவர்ச்சியில்

அன்று 
ஊரே கூட கோலாகல விழா
இன்று
ஊருக்கே போக முடியாத மூடுவிழா 

அன்று
கைவீசி நடந்தோம்
இன்று
கைப்பேசியுடன் நடக்கிறோம்

அன்று 
ஜனநாயகம்
இன்று
பணநாயகம்

அன்று 
விளைச்சல் நிலம்
இன்று
விலை போன நிலம்

அன்று 
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
இன்று
கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

அன்று 
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று
நடக்குது வெற்று நிகழ்ச்சி 

🦋 அன்று
வாழ்ந்தது  வாழ்க்கை

🦀 இன்று
ஏதோ வாழும் வாழ்க்கை.

படித்ததில் பிடித்தது...

அரவிந்த் த. 

Tuesday, December 15, 2020

Essential Car Driving Tips for the Hills for a Safe Journey

There is no denying the fact that the hilly areas are full of scenic sights almost everywhere. Adding to that, the pleasant chilly atmosphere itself is enough motivation for people to pack up and embark on a road trip to their neighboring hill stations. But what most of these people don’t realize is that driving on the hills demand a separate etiquette. It is a totally different ball game than driving in the flat plain areas. The sad part is that a majority of people are completely unaware of this fact. This, in turn, can lead to disastrous outcomes in the form of accidents. So here, we will take a look at some of the essential car driving tips that are of paramount importance for driving in the hills. Share these pointers with your relatives and friends as well so that they are also well-prepared during their excursions.

Car Driving Tips for the Hills Cover

Essential Car Driving Tips for the Hills:

Overtaking in the Hills

Overtaking in the hills is very tricky and needs to be done with at most caution. The most important thing to keep in mind is NEVER ever attempt an overtaking maneuver in the middle of turns. Always wait for the longer and wider straight sections. Often the roads will only have two lanes out of which only one is for you to use. So, ensure that the lane beside you is also empty at the beginning of the stretch itself.

Car Driving Tips for the Hills Overtaking

Patience is key here. If you are unsure you’ll find the lane beside you to be empty, no problem. Wait it out and attempt to overtake once you certainly know it’s empty. The overtaking procedure is pretty much standard, honk the horn, flash the high beams, use the turn signals indicating the lane you are changing to and complete the maneuver in one smooth sequence.

The Correct Gear

Your car has a wonderful device called the gearbox which will help you the most on hilly roads. While moving uphill, gravity is working against you by making you go slower. It is best to stay in a lower gear where the torque output will be maximum. For the downhill section, a lot of people have this misconception that they can stay in neutral and coast away. This is a very dangerous thing to do as gears also act as speed modifiers and can give you that extra bit of stopping power when necessary. For the downhill section, you can stay a gear higher than an uphill section. Gravity is also helping you in this case so you don’t need a mountain load of torque. Having an extra gear in hand also gives you room for engine braking which really comes in handy on such roads.

Car Driving Tips for the Hills Gearbox

Road Signs

The usefulness of road signs is really underestimated by drivers. In the hilly areas, road signs provide you with all the important communications of the road ahead. Hillside roads are narrow, very unpredictable and somewhat dangerous too. So, in such places, you will never be able to predict that the docile looking turn ahead of you leads into an unexpected incline. But if you were vigilant enough to observe the inclined ‘road ahead’ sign before the turn, you will be prepared in advance. Therefore, be sure to observe road signs and keep the presence of mind to react accordingly in time.

Car Driving Tips for the Hills Road Signs

Tackling Hairpin Bends

Hairpin bends are the most difficult types of turns to tackle on hilly roads. But if you know the right technique, you can do so with ease and with peace of mind. The key rule for turning through a hairpin bend is to always slow down, be it uphill or downhill. When you are going uphill, slow down before the turn, shift down to a lower gear and accelerate through the turn. A very important point to remember here is that you need to be highly observant if any car is coming from above.

For downhill, again slow down before the turn and take your foot off the accelerator. Gravity is assisting you so you don’t need any extra output from the car. Take the turn while modulating only the brakes if necessary and punch the accelerator after you have taken the turn. It’s much easier to spot oncoming vehicles while moving downhill so that’s not going to be much of a problem.

Car Driving Tips for the Hills Hairpins

Buses and Trucks

As a general rule, any vehicle moving uphill always has the right of way. But above that, buses, trucks, or any heavy vehicles in any situation always have the right of way. The problem with heavy vehicles is their turning radius and their brakes. They need to go really wide to execute turns and their brakes are often not very effective because of their weight. In case a big vehicle is approaching you, it’s best to move to the side and give it way. Blocking its path can potentially drag you into a mishap so best will be to avoid that on the whole.

Car Driving Tips for the Hills Trucks

A Few General Points:

  • Always stick to your designated left lane
  • Ensure your car has been thoroughly examined for issues before leaving for the trip
  • Ensure that your tyres have adequate tread left. Compromising with the grip on hilly roads is a strict NO!
  • Keep all the necessary tools handy. An add-on puncture repair kit is most welcome
  • For foggy and rainy conditions, minimum speed and maximum alertness is the way to go
  • Keep a medical kit ready with a few common medicines, bandages, creams and compulsory travel sickness tablets
  • Use the horn very generously wherever required to announce that you are present
  • Lastly, be patient, be alert, be composed and be active at all times when you are in control of the steering

The hills are indeed the most beautiful places to go for a weekend retreat and unwind. However, reaching there in a safe and comfortable manner demands a slight extra effort over your innate driving skills. We hope these essential driving tips will prove useful to you for your next journey. HAPPY TRIPPING!

Ref:

Thanks to S. Sriram for this essential blog posting. 

Aravind T.

Tuesday, December 01, 2020

சமையல் டிப்ஸ்

சமையலில் செய்யக்கூடாதவை. 

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

#காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. 

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். 

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்... 

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்... மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்... கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்... சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்... பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்... பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்... சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்... உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து... சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்... சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்... நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்... விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.

Ref: Facebook 

அரவிந்த் த.